< Back
மாநில செய்திகள்
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மாநில செய்திகள்

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தினத்தந்தி
|
31 Aug 2022 10:20 AM GMT

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கும்பக்கரை அருவி இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து இருக்கும்.

கொடைக்கானல் மற்றும் அருவி பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனை தொடர்ந்து முன்புற கதவு அடைக்கப்பட்டது. நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்