< Back
மாநில செய்திகள்
3 நாட்களுக்குப்பின் சென்னை-தூத்துக்குடி இடையே இன்று விமான சேவை தொடக்கம்...!
மாநில செய்திகள்

3 நாட்களுக்குப்பின் சென்னை-தூத்துக்குடி இடையே இன்று விமான சேவை தொடக்கம்...!

தினத்தந்தி
|
20 Dec 2023 3:15 AM GMT

கனமழை, வெள்ளம் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது.

தூத்துக்குடி,

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது.

கனமழையால் தூத்துக்குடி விமான நிலையத்தை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னை - தூத்துக்குடி இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் மழை தற்போது ஓய்ந்துள்ளது. விமான நிலையத்தில் தேங்கிய நீர் தற்போது அகற்றப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளது. இதனை தொடர்ந்து 3 நாட்களுக்குப்பின் சென்னை - தூத்துக்குடி இடையேயான விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு 64 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு விமானம் புறப்பட்டது. அதேபோல், தூத்துக்குடியில் இருந்தும் சென்னைக்கு இன்று விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்