< Back
மாநில செய்திகள்
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 3-வது நாளாக விமான சேவை ரத்து
மாநில செய்திகள்

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 3-வது நாளாக விமான சேவை ரத்து

தினத்தந்தி
|
20 Dec 2023 12:22 AM GMT

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

மீனம்பாக்கம்,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையால் அப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தொடர்ந்து 3-வது நாளாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமான சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் வானிலை சீரானதும் விமான சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்