< Back
மாநில செய்திகள்
விட்டமாப்பட்டி குளத்தில் மீன்பிடி திருவிழா
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

விட்டமாப்பட்டி குளத்தில் மீன்பிடி திருவிழா

தினத்தந்தி
|
1 Jun 2022 6:06 PM GMT

விராலிமலை அருகே விட்டமாப்பட்டி குளத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

விராலிமலை:

மீன்பிடி திருவிழா

விராலிமலை அருகே கடப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் முன்பு உள்ள விட்டமாப்பட்டி குளத்தில் கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக நீர் நிரம்பி இருந்தது. சுமார் ஒரு ஆண்டிற்கு மேலாக குளத்தில் நீர் வற்றாமல் இருந்ததால் சிறிய, பெரிய வகை மீன்கள் இருந்து வந்தது. இந்நிலையில் குளத்தின் நீரானது தற்போது வற்றியதால் மீன்பிடி திருவிழா நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று காலை மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

குளத்தில் இறங்கி மீன் பிடித்தனர்

இதையடுத்து கடப்பட்டி, கல்குடி, பொருவாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாலையிலேயே குளத்தில் வந்து குவிந்தனர். அதைதொடர்ந்து கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து குளத்தின் கரையில் தயாராக நின்ற பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த வலை, தூரி, கச்சா உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் மீன்களை பிடிக்க இறங்கினர்.

இதில் விரால், அயிரை, கெழுத்தி, வளனகெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராமமக்கள் பிடித்து சென்றனர். எங்கும் இல்லாத வகையில் பெரியவர்களுக்கு இணையாக சிறுவர்களும் இக்குளத்தில் இறங்கி மீன்பிடித்த சம்பவம் மீன்பிடி திருவிழாவை காண வந்தவர்களை மகிழ்ச்சியடைய செய்தது. பின்னர் கிராமமக்கள் தங்களுக்கு கிடைத்த மீன்களை வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்