< Back
மாநில செய்திகள்
நாகை: மீன் ஏற்றிச் சென்ற டெம்போ கவிழ்ந்து மீனவ பெண் பலி - 7 பேர் படுகாயம்
மாநில செய்திகள்

நாகை: மீன் ஏற்றிச் சென்ற டெம்போ கவிழ்ந்து மீனவ பெண் பலி - 7 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
25 May 2022 5:06 AM GMT

நாகை அருகே மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்ததில் மீனவப் பெண்மணி சம்பவ இடத்துலேயே பலியானார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண்கள் 8 பேர் அதிகாலையில் டெம்போ வாகனத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு வியாபாரம் செய்வதற்கு திருவாரூர் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது கீழ்வேளூர் அருகே சென்ற போது வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய வாகனத்தின் அச்சு முறிந்து தலைகுப்புற கவிழ்ந்துள்ளது.

இதில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சற்குணம் என்ற மீனவப் பெண்மணி தலையில் பலமாக அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 7 மீனவப் பெண்களை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீன் வியாபாரத்திற்கு சென்ற மீனவ பெண்மணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்