< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்

தினத்தந்தி
|
23 July 2022 5:03 AM GMT

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவர மீனவர்கள், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளனர்.

இதனால் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்களும் அதைச் சார்ந்த தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்