< Back
மாநில செய்திகள்
மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
20 Jun 2023 6:45 PM GMT

மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

குளச்சல்:

குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்தவர் ஜோசப்பாத் (வயது 52), மீனவர். இவருடைய மனைவி அருள்ஜான்சி (48). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மூத்த மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் ஊரில் கடல் தொழில் செய்து வருகிறார். ஜோசப்பாத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜோசப்பாத் நேற்று முன்தினம் இரவு சமையலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அருள் ஜான்சி குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்