< Back
மாநில செய்திகள்
மீன்பிடி திருவிழா
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மீன்பிடி திருவிழா

தினத்தந்தி
|
29 May 2022 3:20 PM GMT

முதுகுளத்தூர் அருகே மீன்பிடி திருவிழா நடந்தது.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள கே. ஆர்.பட்டினம் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடைக்குபின் கோடை காலம் தொடங்கும்முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையடுத்து கே.ஆர். பட்டினம் கிராமத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை, தூரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன் பிடிக்க தொடங்கினர். அப்போது பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன் களான கெளுத்தி, குறவை, ஜிலேபி, அயிரை, விரால், கட்லா ஆகிய மீன் வகைகள் கிடைத்தன. இதனை மகிழ்ச்சி யுடன் பொதுமக்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்