< Back
மாநில செய்திகள்
பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

பொருநை அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
18 May 2023 6:08 AM GMT

உலகத்தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு காணொலி காட்சியின் மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நெல்லை,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் நெல்லையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து பாளை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மொத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு 13 ஏக்கர் பரப்பளவில் இடம் கையகப்படுத்தப்பட்டது. உலகத்தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு காணொலி காட்சியின் மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும் செய்திகள்