< Back
மாநில செய்திகள்
தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தினத்தந்தி
|
29 July 2023 6:45 PM GMT

தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கீழ்வேளூர் அருகே வலிவலம் ஊராட்சியில் இருதய கமலநாத சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கீழ்வேளூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. வெள்ளம்-பேரிடர் காலங்களில் ஆறு, குளங்களில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது, தீ விபத்து ஏற்படும் போது எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், அலுவலக ஊழியர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் பூமிநாதன், தீயணைப்பு துறை சிறப்பு நிலை அலுவலர் ராஜராஜ சோழன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வாய்மேடு தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் (பொறுப்பு) ஜெயக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் புயல், வெள்ளம், மழை பேரிடர் காலங்களில் எப்படி பொதுமக்களை காப்பாற்றுவது என பயிற்சி மூலம் செயல்விளக்கம் காண்பித்தனர். இதில் தீயணைப்பு வீரர்கள், கோவில் எழுத்தர் கார்த்தி மற்றும் சிவாச்சாரியார்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்