< Back
மாநில செய்திகள்
ஆடி மாத பிறப்பையொட்டிநாமக்கல்லில் தேங்காய் சுடும் பண்டிகைசிறுவர், சிறுமிகள் உற்சாகம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆடி மாத பிறப்பையொட்டிநாமக்கல்லில் தேங்காய் சுடும் பண்டிகைசிறுவர், சிறுமிகள் உற்சாகம்

தினத்தந்தி
|
17 July 2023 7:00 PM GMT

ஆடி மாத பிறப்பையொட்டி நேற்று நாமக்கல்லில் சிறுவர், சிறுமிகள் தேங்காய் சுடும் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தேங்காய் சுடும் பண்டிகை

ஆடிமாத பிறப்பையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நாமக்கல் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று மாலை பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள், புதுமண தம்பதியினர் தேங்காய் சுட்டு பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

இளம் தேங்காயில் அவல், பொட்டு கடலை, வெல்லம், எள், அரிசி, பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்களை நிரப்பி, தேங்காயின் ஒரு கண்ணில் அழிஞ்சி குச்சியை சொருகி தீயில் வாட்டி தேங்காயை சுட்டனர்.

கோவில்களில் சிறப்பு பூஜை

இவ்வாறு சுடப்பட்ட தேங்காய்களை அந்தந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் படைத்து வழிபட்டனர். பின்னர் அந்த தேங்காய் உடன் தீயில் சுட்ட பொருட்களை அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்தும், குடும்பத்துடன் சாப்பிட்டும் தலையாடி பண்டிகையை கொண்டாடினர். நாமக்கல் நகரில் நேற்று சுவாமிநகர், தில்லைபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதேபோல் ஆடிமாத பிறப்பையொட்டி நேற்று பலப்பட்டரை மாரியம்மன் கோவில், அழகுநகர் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்