< Back
மாநில செய்திகள்
புளியந்தோப்பு தொழிலாளி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் கைது
சென்னை
மாநில செய்திகள்

புளியந்தோப்பு தொழிலாளி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் கைது

தினத்தந்தி
|
30 Jun 2022 5:04 AM GMT

புளியந்தோப்பு தொழிலாளி கொலை வழக்கில் தந்தை மற்றும் மகன்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புளியந்தோப்பு நெடுஞ்சாலை 5-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). தனியார் நிறுவன தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு 4 பேர் கொண்ட கும்பலால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை தொடர்பாக திருவல்லிக்கேணியை சேர்ந்த கிருஷ்ணன் என்ற சின்னா (49), அவரது மகன்களான சதீஷ் (27), முரளி (25), தினேஷ் (22) மற்றும் அவர்களின் நண்பரான முகேஷ் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2001-ம் ஆண்டு கிருஷ்ணனை கத்தியால் தாக்கியதில் அவரது கை சேதமடைந்தது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் மற்றும் அவரது 3 மகன்களும் தனது நண்பருடன் சேர்ந்து சுரேசை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்