< Back
மாநில செய்திகள்
சாலையோர மரத்தில் வேன் மோதி தந்தை-மகன் படுகாயம்
கரூர்
மாநில செய்திகள்

சாலையோர மரத்தில் வேன் மோதி தந்தை-மகன் படுகாயம்

தினத்தந்தி
|
28 July 2023 12:13 AM IST

சாலையோர மரத்தில் வேன் மோதி தந்தை-மகன் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்(வயது 52). இவர் சம்பவத்தன்று ஆம்னி வேனில் தனது மகன் முத்துக்குமாரசாமியுடன்(17) தனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்காக தோகைமலை அருகே வீரப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். ஆம்னி வேனை திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள சிவசூரியன்(34) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். குளித்தலை-மணப்பாறை சாலையில் குண்ணாகவுண்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது வேன் சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் வேனில் பயணம் செய்த சிவகுமார் மற்றும் அவரது மகன் முத்துக்குமாரசாமி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைப் பார்த்த அங்கு இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்