< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
இடத்தகராறில் ஒருவரை தாக்கியதாக தந்தை-மகன் கைது
|7 April 2023 9:50 PM GMT
இடத்தகராறில் ஒருவரை தாக்கியதாக தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
கே.கே.நகர்:
திருச்சி, கீழப்பஞ்சப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகன் பிரபாகரன். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகேசன்(வயது 45). இவர்கள் 2 பேர் வீட்டின் இடத்தின் நடுவே முள்வேலி அமைப்பது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முருகேசன் மற்றும் அவரது மகன் ராஜேஷ்(27) ஆகியோர் பிரபாகரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, அவர் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் மற்றும் ராஜேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.