< Back
மாநில செய்திகள்
தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து குறைந்ததால் பச்சை பட்டாணி கிலோ ரூ.210-க்கு விற்பனை
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து குறைந்ததால் பச்சை பட்டாணி கிலோ ரூ.210-க்கு விற்பனை

தினத்தந்தி
|
18 July 2023 7:30 PM GMT

தர்மபுரி:

தக்காளி, சின்னவெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்ததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பச்சை பட்டாணி கடந்த வாரம் 1 கிலோ ரூ.190 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. வரத்து சற்று அதிகரித்ததால் நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ ரூ.192-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் உழவர் சந்தைக்கு பச்சை பட்டாணி வரத்து நேற்று குறைந்ததால் கிலோவிற்கு ரூ.18 அதிகரித்தது. இதன் காரணமாக தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ பச்சை பட்டாணி ரூ.210-க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.220 முதல் ரூ.230 வரை விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்