< Back
மாநில செய்திகள்
கரும்பு விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கரும்பு விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

தினத்தந்தி
|
6 Dec 2022 9:08 PM GMT

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி அரை நிா்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி அரை நிா்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரை நிர்வாண போராட்டம்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆருரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 30-ந் தேதி முதல் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.நேற்று 7-ம் நாளாக கரும்பு விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி கடன்

போராட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாகமுருகேசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் தங்க காசிநாதன், ராஜேந்திரன் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், ஆலை முன்பு கையில் மண்சட்டி ஏந்தி கோமணம் அணிந்து அரை நிர்வாணமாக, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீர்த்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த கரும்புக்கான முழுதொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆலையை தனியாருக்கு தாரைவார்க்காமல் தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்