< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
10 April 2023 6:45 PM GMT

விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

விழுப்புரம்:

விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்குகிறார். எனவே இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் ஆகிய தாலுகாக்களுக்குட்பட்ட விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்