< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
21 March 2023 7:00 PM GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 31-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண இருக்கின்றனர். எனவே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, விவசாய கடன் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்