< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
|28 Sep 2022 10:50 PM GMT
நெல்லையில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது
நெல்லை மாவட்டத்தில் இந்த செப்டம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடையலாம்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.