< Back
மாநில செய்திகள்
மத்திய அரசு உதவித்தொகை பெறும்  விவசாயிகள், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் - அதிகாரி தகவல்
மதுரை
மாநில செய்திகள்

மத்திய அரசு உதவித்தொகை பெறும் விவசாயிகள், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் - அதிகாரி தகவல்

தினத்தந்தி
|
3 Dec 2022 7:43 PM GMT

மத்திய அரசு உதவித்தொகை பெறும் விவசாயிகள், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.


மத்திய அரசு உதவித்தொகை பெறும் விவசாயிகள், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு உதவித்தொகை

மதுரை கோட்ட தபால்துறை முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், தங்களது அடுத்த தவணையை தொடர்ந்து பெறுவதற்கு வருகிற 15-ந் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும். அதாவது, https://pmkisan.gov.in/aadharekyc.aspx என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவோ, செல்போன் செயலி மூலமாகவோ தங்களது செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை அங்கீகாரக்குறியீட்டை (ஓ.டி.பி.) பயன்படுத்தி, சுய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகள் தங்களின் ஆதாருடன் செல்போன் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

செல்போன் எண்ணை இணைக்கலாம்

எனவே, விவசாயிகள் அருகில் உள்ள தபால்நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியரை தொடர்பு கொண்டு, தங்களது ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்து கொள்ளலாம். தபால்காரர் மற்றும் கிராம தபால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செல்போன் மற்றும் பயோமெட்ரிக் கருவி மூலம் விவசாயிகளுக்கு ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைத்து தரப்படும். இதற்காக ரூ.50 மட்டும் கட்டணமாக செலுத்த வேண்டும். மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமப்புறங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை விவசாயிகள் பயன்படுத்தி இந்த சேவையை பெறமுடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்