< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் பிரசார நடைபயணம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விவசாயிகள் பிரசார நடைபயணம்

தினத்தந்தி
|
4 March 2023 7:29 PM GMT

14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் பிரசார நடைபயணம் மேற்கொண்டனர்.

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய தொழிலாளர் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடந்தது. அத்தியூரில் தொடங்கிய நடை பயணத்தை ஒன்றிய நிர்வாகி பழனி தொடங்கி வைத்தார். இந்த பிரசார நடைபயணம் சின்னகொள்ளியூர், சிவபுரம், ஓடியந்தல் கிராமங்கள் வழியாக வாணாபுரம் பகண்டை கூட்டுரோட்டை வந்தடைந்தது. இதையடுத்து அங்கு நடந்த பிரசார கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் பூமாலை, ஆட்டோ சங்கத் தலைவர் செந்தில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ஹரிகிருஷ்ணன், நிர்வாகிகள் உத்தரக்கோட்டி, பாலமுருகன், அம்பிகா, ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டு குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம், ஓய்வூதியம் 10 ஆயிரம், ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரப்படுத்த வேண்டும், வேளாண் விளைபொருள்களுக்கு கூடுதல் ஆதார விலை வேண்டும், விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின்சார சட்டத்தை திரும்பப் பெறுதல், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துதல், கூலியை 600 ரூபாயாக உயர்த்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

மேலும் செய்திகள்