< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து விவசாயி சாவு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

விஷம் குடித்து விவசாயி சாவு

தினத்தந்தி
|
22 Jun 2022 1:23 PM GMT

விஷம் குடித்து விவசாயி இறந்தார்.

கீழ்வேளூர் அருகே உள்ள வெண்மணி ஊராட்சி கீழகாவாலக்குடியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது55). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது மனைவியிடம் வயலுக்கு விதை நெல் வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவருடைய மனைவி, நல்ல நாள் இல்லை என்பதால் விதை நெல் வாங்க வேண்டாம் என்று கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த பரமசிவம், களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்