< Back
மாநில செய்திகள்
சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை

தினத்தந்தி
|
3 Jun 2022 6:29 PM GMT

பழனி அருகே சொத்து தகராறில் விவசாயியை வெட்டி கொன்ற அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெட்டிக்கொலை

பழனியை அடுத்த புளியமரத்துசெட் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 55). இவரது தம்பி மகேந்திரன் (50). 2 பேரும் விவசாயிகள். கடந்த சில ஆண்டுகளாக சொத்து பிரச்சினை காரணமாக ஈஸ்வரனுக்கும், மகேந்திரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அங்குள்ள தோட்டத்தில் வைத்து அண்ணன்-தம்பிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

ஒருகட்டத்தில் ஈஸ்வரன், தோட்டத்தில் இருந்த அரிவாளை எடுத்து தம்பி என்றும் பாராமல் மகேந்திரனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ஈஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அண்ணனுக்கு வலைவீச்சு

இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஈஸ்வரனை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்