< Back
மாநில செய்திகள்
கீரம்பூர் அருகேகார் மோதி விவசாயி பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

கீரம்பூர் அருகேகார் மோதி விவசாயி பலி

தினத்தந்தி
|
1 July 2023 6:45 PM GMT

பரமத்திவேலூர்

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள வேட்டுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 50) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு கீரம்பூர் டோல்கேட் அருகே கரூரில்-சேலம் செல்லும் பைபாஸ் சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது கரூரிலிருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த கார் சரவணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளார். அதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு சரவணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்