< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்  மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு  விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
29 Jun 2022 5:44 PM GMT

பரமத்திவேலூரில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்குட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

கிழங்கு ஆலையில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த வாரம் டன் ரூ.2 ஆயிரம் உயர்ந்து ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையானது.

அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.17 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்