< Back
மாநில செய்திகள்
குளவி கொட்டியதில் விவசாயி சாவு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

குளவி கொட்டியதில் விவசாயி சாவு

தினத்தந்தி
|
17 Aug 2023 1:12 PM GMT

செய்யாறு அருகே குளவி கூட்டை கலைக்க முயன்றபோது குளவி கொட்டியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

செய்யாறு

செய்யாறு அருகே குளவி கூட்டை கலைக்க முயன்றபோது குளவி கொட்டியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

குளவி கொட்டியது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மோரணம் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 70), விவசாயி. இவரது மனைவி முருகம்மாள் (64), இவர்களுக்கு வாணி என்ற மகளும், சரவணன், நாராயணன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

இவர்களின் வீட்டின் மேல்மாடியில் குளவி கூடு கட்டி இருந்தது. அதனை கலைப்பதற்காக பாலு மற்றும் குடும்பத்தினர் மாடிக்கு சென்றனர். அதனை அவர்கள் கலைக்க முயன்றபோது அனைவரையும் குளவி கொட்டியது. இதில் பாலு படுகாயம் அடைந்தார். மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலு சிகிச்சைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவசர சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாலுவின் மகன் சரவணன் மோரணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்