< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
பஸ்சில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
|22 May 2023 6:45 PM GMT
பஸ்சில் இருந்து தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
மேல்மலையனூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சக்திவேல் (வயது 50). விவசாயி சம்பவத்தன்று இவர் மேல்மலையனூரில் இருந்து சொந்த ஊருக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சக்திவேல் படிக்கட்டில் பயணம் செய்தார். செவலபுரை பாலத்தின் அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சக்திவேல் பஸ்சிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.