< Back
மாநில செய்திகள்
தவறி விழுந்து விவசாயி சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

தவறி விழுந்து விவசாயி சாவு

தினத்தந்தி
|
13 Nov 2022 6:34 PM GMT

பரமத்திவேலூர் அருகே தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர், சோழிய வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது60). வெற்றிலை விவசாயி. இவரது மனைவி ரேவதி (50). இவருக்கு பரமத்திவேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் சொந்தமான வெற்றிலை கொடிக்கால் உள்ளது.

இந்த வெற்றிலை கொடிக்காலில் வேலை செய்வதற்காக கடந்த 11-ந் தேதி காலையில் அங்கு சென்று இருந்தார். இந்தநிலையில் வெகு நேரமாகியும் முருகேசன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ரேவதி மற்றும் அவரது குடும்பத்தினர் வெற்றிலை கொடிக்காலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது முருகேசன் கொடிக்காலில் கிடங்கிற்குள் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்