< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
18 March 2023 6:45 PM GMT

காணை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

காணை:-

காணை அருகே உள்ள காங்கேயனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 61), விவசாயி. சம்பவத்தன்று இவர் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்கு சென்று அங்கு விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்