< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
20 Jan 2023 6:45 PM GMT

சின்னசேலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

சின்னசேலம்

சின்னசேலம் அருகே எலவடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 47). விவசாயியான இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததார். இந்த நிலையில் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த முருகனை அவரது மனைவி லட்சுமி(41) கண்டித்ததால் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்த முருகனை உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்