< Back
மாநில செய்திகள்
திருக்கோவிலூர் அருகே    விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
26 Oct 2022 6:45 PM GMT

திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள மேலந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 53), விவசாயி. குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவரை சம்பவத்தன்று அவருடைய குடும்பத்தினர் ஏன் மதுவை குடித்து உடல்நலத்தை கெடுத்து கொள்கிறீர்கள் என கேட்டு, அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காமராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விட்டார். இதைபார்த்த அவருடைய குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே காமராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்