< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
20 July 2022 2:51 PM GMT

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தக்கலை:

தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி தென்கரை தோப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 60). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இவர் வயல்களை குத்தகைக்கு எடுத்து கடன் வாங்கி வாழை விவசாயம் செய்து வந்துள்ளார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தந்தை வாங்கிய கடனை மகன்கள் 2 பேரும் அடைத்துள்ளனர். இந்தநிலையில் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது என நினைத்த முருகன் சம்பவத்தன்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்