< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
|7 Jun 2022 6:12 PM GMT
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 65). விவசாயி. இவருக்கு மூட்டு வலி அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த முனியன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முனியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.