< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு...!
தென்காசி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு...!

தினத்தந்தி
|
23 May 2022 4:16 PM GMT

பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் மீது அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார்.

தென்காசி அருகே உள்ள மத்தளம் பாறையை சேர்ந்தவர் செல்வநாயகம். இவர் பத்திர எழுத்தர் ஆவார். இவரது மகன் விக்னேஷ்பாண்டி (வயது 28). இவர் தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார்.

இவரது நண்பர் விக்னேஷ் (29). நேற்று இரவு இருவரும் பாவூர்சத்திரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். விக்னேஷ்பாண்டி மோட்டார் சைக்கிளில் பின்னால் ஒரு நாயை கையில் வைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

பாவூர்சத்திரம் அடுத்துள்ள ராமச்சந்திர பட்டணம் அருகே சென்ற போது இவர்கள் கொண்டு சென்ற நாய் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து தப்பி ஓடியது, அதனை பிடிக்க முயன்ற விக்னேஷ்பாண்டி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்துள்ளார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது ஏறியது, இதில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விக்னேஷ்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான விக்னேஷ்பாண்டிக்கு வளர்மதி என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

மேலும் செய்திகள்