< Back
மாநில செய்திகள்
தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள் - சீமான்
மாநில செய்திகள்

தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள் - சீமான்

தினத்தந்தி
|
12 March 2023 2:12 PM GMT

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை,

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரையும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 14-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரையும் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.

சென்னையில் மட்டும் தலா 180 மையங்களில் 88 ஆயிரத்து 104 மாணவ-மாணவிகள் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 16 லட்சத்து 39 ஆயிரத்து 367 பேர் எழுத இருக்கின்றனர்.

பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப்படைக்க காத்திருக்கிற இளையப் புரட்சியாளர்களான எனதன்பு தம்பி–தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!

தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வென்று மென்மேலும் உயருங்கள்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்