< Back
மாநில செய்திகள்
வீட்டில் கூடுகட்டிய விஷ வண்டுகள் அழிப்பு
கடலூர்
மாநில செய்திகள்

வீட்டில் கூடுகட்டிய விஷ வண்டுகள் அழிப்பு

தினத்தந்தி
|
12 Aug 2022 5:11 PM GMT

மங்கலம்பேட்டை அருகே வீட்டில் கூடுகட்டிய விஷ வண்டுகள் அழிப்பு

விருத்தாசலம்

மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்ணத்தம் கிராமம், தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலு மகன் கோபு (வயது 46). இவரது வீட்டுக்கு அருகே உள்ள பழைய ஓட்டு வீட்டில் பாட்டி காவேரி ( 72) என்பவர் வசித்து வருகிறார். இவரை விஷ வண்டுகள் கடித்தது. இதையடுத்து அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து கோபு வீட்டில் பார்த்த போது, அங்கு பனைமரசாரத்தில் விஷவண்டுகள் கூடு கட்டி இருந்தது. இதுகுறித்து அறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் பேரிடர் மீட்பு நிலைய சிறப்பு அலுவலருமான ஜெயச்சந்திரன் (போக்குவரத்து) தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முகமது புன்யாமீன், அசோக், செல்வம் ஆகியோர் அங்கு விரைந்துச் சென்று, விஷ வண்டுகளை பாதுகாப்புடன் அழித்தனர்.

மேலும் செய்திகள்