< Back
மாநில செய்திகள்
4 பேருக்கு காவல் நீட்டிப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

4 பேருக்கு காவல் நீட்டிப்பு

தினத்தந்தி
|
8 Jun 2023 6:45 PM GMT

4 பேருக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கர்களாக செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகிய 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மற்ற 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத், வழக்கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 12-ந் தேதியே வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற உள்ளதாகவும், வழக்கினை விரைந்து விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்