< Back
மாநில செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

தினத்தந்தி
|
5 Dec 2023 12:52 PM GMT

கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

சென்னை,

கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது, செந்தி பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு, நீதிமன்ற காவலில் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதிலிருந்து செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த இரு மனுக்களை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அதுவும், தள்ளுபடி செய்யப்பட்டது. கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கு மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே, சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல பாதிப்பு காரணமாக தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியிஜ் நீதிமன்ற காவலை 12ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்