< Back
மாநில செய்திகள்
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் காந்தி இர்வின் மேம்பால சந்திப்பிலிருந்து தாசப்பிரகாஷ் வரை போக்குவரத்து மாற்றம்
சென்னை
மாநில செய்திகள்

ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் காந்தி இர்வின் மேம்பால சந்திப்பிலிருந்து தாசப்பிரகாஷ் வரை போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
16 July 2022 5:48 AM GMT

ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் காந்தி இர்வின் மேம்பால சந்திப்பிலிருந்து தாசப்பிரகாஷ் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலையில், காந்தி இர்வின் மேம்பால சந்திப்பில் இருந்து, டாக்டர் நாயர் பாலம் சந்திப்பு வரை குடிநீர் வாரியத்தினர் பள்ளம் தோண்டி ராட்சத குடிநீர் குழாய் அமைக்கும் பணி செய்ய உள்ளதால், அந்த பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 18-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். போக்குவரத்து மாற்றம் விவரம் வருமாறு:-

1. ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் தாசப்பிரகாஷ் சந்திப்பில் இருந்து, சென்டிரல் நோக்கி வரும் வாகனங்கள் எவ்வித மாற்றமும் இன்றி, நேராக செல்லலாம்.

2. காந்தி இர்வின் மேம்பால சந்திப்பில் இருந்து, தாசப்பிரகாஷ் சந்திப்பு வரை ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் வாகனங்கள் நேராக செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக, காந்தி இர்வின் சாலை, அழகுமுத்துகோன் சிலை, எழும்பூர் ரெயில் நிலையம், உடுப்பி பாயிண்ட் மற்றும் நாயர் மேம்பாலம் வழியாக வந்து வழக்கம்போல ஈ.வெ.ரா.பெரியார் சாலையில் போகலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்