< Back
மாநில செய்திகள்
ஈரோடு மாட்டுச்சந்தைக்கு  கர்நாடக மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு மாட்டுச்சந்தைக்கு கர்நாடக மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது

தினத்தந்தி
|
6 Oct 2022 9:18 PM GMT

ஈரோடு மாட்டுச்சந்தைக்கு கர்நாடக மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

ஈரோடு மாட்டுச்சந்தைக்கு கர்நாடக மாநில வியாபாரிகள் வருகை குறைந்தது.

மாட்டுச்சந்தை

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை நேற்று கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் 250 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 450 மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதேபோல் 50 கன்றுக்குட்டிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பலர் வந்திருந்தார்கள். அவர்கள் விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை வாங்கி சென்றார்கள்.

80 சதவீதம்

இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறியதாவது:-

கர்நாடகா மாநிலத்தில் தசரா பண்டிகை நடந்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் இருந்து வழக்கமாக மாடுகளை வாங்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது. இந்த சந்தையில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், கன்றுக்குட்டி ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் விலைபோனது. சந்தையில் 80 சதவீத மாடுகள் விற்பனையானது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்