< Back
மாநில செய்திகள்
பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு
சிவகங்கை
மாநில செய்திகள்

பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு

தினத்தந்தி
|
21 Sep 2022 6:45 PM GMT

பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு இன்றும், நாளையும் நடக்கிறது.


சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் இரண்டு நகல்களுடன் வர வேண்டும். செயற்கை கட்டணமாக எம்.ஏ. மாணவர்கள் ரூ.ஆயிரம் கட்ட வேண்டும். எம்.எஸ்சி. மாணவர்கள் ரூ.1020-ம் எம்.எஸ்சி. கணினி அறிவியல் மாணவர்கள் ரூ.1,520-ம் கட்ட வேண்டும். அழகப்பா பல்கலைக்கழகம் தவிர பிற பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளில் படித்த மாணவர்கள் கூடுதல் கட்டணமாக ரூ.195 செலுத்த வேண்டும். இத்தகவலை கல்லூரி முதல்வர் துரையரசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தவர்கள் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் இந்திரா தெரிவித்தார்.


மேலும் செய்திகள்