< Back
மாநில செய்திகள்
மின் கட்டண உயர்வு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

மின் கட்டண உயர்வு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
1 Sep 2022 2:06 PM GMT

மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தமிழக மின்வாரியத்தின் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பணியிடம் பணியிடம் காலியாகும் பொழுது அதற்கான நபர்களை தேர்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும். அதன் அடிப்படையில் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான நபரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் தனி நீதிபதி இதனை கருத்தில் கொள்ளாமல் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் தமிழக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும் ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுந்தர் மற்றும் ஸ்ரீமதி அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்