< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
28 Sep 2023 6:45 PM GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் கோட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 3-ந் தேதி காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர் உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 10-ந் தேதி தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 17-ந் தேதி கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி கிழக்கு உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 31-ந் தேதி தூத்துக்குடி ஊரக கோட்டத்துக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர் உதவி பொறியாளர் அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்