< Back
மாநில செய்திகள்
திருத்தணியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் - 19-ந்தேதி நடைபெறுகிறது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் - 19-ந்தேதி நடைபெறுகிறது

தினத்தந்தி
|
15 July 2022 7:10 AM GMT

திருத்தணியில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 19-ந்தேதி நடைபெறுகிறது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருத்தணி, அரக்கோணம் சாலையில், உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், வருகின்ற 19-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற இருக்கின்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளையும், புகார்களையும் தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்தும் மனுவும் அளிக்கலாம். எனவே, திருத்தணி கோட்ட விவசாயிகள் மற்றும் மின்நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்