< Back
மாநில செய்திகள்
எலக்ட்ரீசியன் குத்திக்கொலை
மதுரை
மாநில செய்திகள்

எலக்ட்ரீசியன் குத்திக்கொலை

தினத்தந்தி
|
7 Sep 2022 8:43 PM GMT

எலக்ட்ரீசியன் குத்திக்கொலை

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குறவங்குளத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). எலக்ட்ரீசியன். இவர் நேற்று மாலையில் சின்ன ஊர்சேரி பக்கம் பழைய செங்கல் காளவாசலில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அருகில் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும், அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை தடயவியல் பதிவு செய்யப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இறந்த செல்வத்திற்கு மனைவியும், மகளும் உள்ளனர்.

மேலும் எதற்காக செல்வம் கொலை செய்யப்பட்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கொலை செய்த நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்