< Back
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
திருச்சி
மாநில செய்திகள்

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

தினத்தந்தி
|
4 Dec 2022 8:54 PM GMT

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.

துவரங்குறிச்சி:

எலக்ட்ரீசியன்

துவரங்குறிச்சி அருகே உள்ள அக்கியம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 27). எலக்ட்ரீசியனான இவருக்கு திருமணமாகி மகா என்ற மனைவியும், மிதுர்லாசினி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று லிங்கம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு மின் இணைப்புக்கான வயரிங் வேலையை பிரகாஷ் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்