
விருதுநகர்
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் பகுதியில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மீனாட்சி நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் சாரூக் மொய்தீன் (வயது 24) என்பவர் ஏ.சி. பொருத்தும் பணியில் ஈடுபட்டார். இவர் வழக்கம் போல் பணி செய்து கொண்டு இருந்த போது அவரது அருகில் இருந்த இரும்பு கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் கம்பியை பிடித்த அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சாரூக் மொய்தீன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.