< Back
மாநில செய்திகள்
விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை

தினத்தந்தி
|
27 April 2023 6:45 PM GMT

மந்தாரக்குப்பம் அருகே விஷம் குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.

மந்தாரக்குப்பம்

மந்தாரக்குப்பம் அருகே உள்ள வீணங்கேணி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் ராம்குமார் (வயது 30), எலக்ட்ரீசியன். இவருக்கும், சவுமியா(25) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று ராம்குமார் விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்