< Back
மாநில செய்திகள்
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
20 May 2023 10:00 PM GMT

தஞ்சையில், 23-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்;

தஞ்சை நகர மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை நகர பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை கோர்ட்டு சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்குகிறார். எனவே தஞ்சை நகர கோட்டத்திற்குட்பட்ட தெற்கு வீதி, வடக்கு வீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்தநகர், பர்மாகாலனி, நிர்மலாநகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய ஹவுசிங்யூனிட், காந்திஜி ரோடு, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான்நகர், ரெட்டிப்பாளையம் சாலை, சிங்கபெருமாள்கோவில், ஜெபமாலைபுரம், வித்யாநகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ்ப்பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திராநகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்