< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டியில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டியில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை

தினத்தந்தி
|
1 Aug 2023 6:45 PM GMT

கோவில்பட்டியில் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் காளியப்பன் மனைவி வடிவம்மாள் (வயது 95). இவர் உறவினர் மாடசாமி கடையில் சிறு சிறு வேலைகளை பார்த்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே உள்ள இறைச்சி கடையின் முன்புறத்தில் நேற்று திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்